பள்ளிக்கால கனவுகள் மீண்டும் தொடர்கின்றன...
அவள் நினைவாக...
முதன் முதலில் என் மனதை
தொடமால் தொட்டு
சரித்து விட்டு...
உயிர்மெய்யெழுத்தாக என்னை கலங்க வைத்து
சென்ற அந்தநாள் ...
இனிமையான நினைவுகளாக மனமுழுவதும்
தொடர்கின்றன...
மறக்காத உன் நினைவுகள் மறுபடியும் எழுத வைக்கின்றன...என்னை தொடர்ந்து உன்னை நினைக்க மட்டும்..
என் நெஞ்சில் ஆயிரம் இடிகள்
உன்னொடு நடக்கிற இந்த இன்பப்போரில்..
தோற்றாலும் ஒரு கவலை இல்லை...என் இனியவளே!
உன்னிடம்தான் தோற்கிறேன்...
என்ற உணர்வோடு மீண்டும் வெற்றி பெறுவேன்.