Monday, February 25, 2008

நிறம் மாறாத பூக்கள்


மாற்றங்கள் இல்லா இவ்வுலகம்
இல்லை...
காலங்கள் மனிதனை
மாற்றுகின்றன...

என் மனத்தோட்டத்தில்
உள்ள நீ என்றும்
நான் பார்த்த இளமைச்சிரிப்புடன்
சிறுவயது முதல் இன்றும்..

என் மனதில் என்றும்
நிறம் மாறாத பூக்களாக..
மலர்ந்த வண்ணம்.

மழைக்காதல்



கார்கால மேகக்கூட்டங்கள்
வானில் வான்வில்லாக...

என்னில் பெய்யென பெய்யும்
மழையாக நீ...

மழை கூட நின்றுவிடும்
காலங்கள் மாறினால்..


Tuesday, February 19, 2008

நினைவுகளாக..


இயற்கையில்
அவளின் ஒசைகள்
என்னுள் குடையிருந்தும்
மழையாக..

என் வண்ணங்கள்
அவள் மலர்முகம்..
என் படைபலங்கள்
அவள் சிரிப்பொலி
என் மனம்
அவளின் நினைவுகளாக..

Monday, February 18, 2008

கனவுகளாக..



என்னில் காதல்
கவிதையில்!!
சப்தமில்லா உலகில் என் காதல்
கனவுகளாக..

கவிதையில் என்னில்
பல மாற்றங்களாக நீ!!
நேரில் பார்க்கமுடியாத கனவுகளாக..


Friday, February 8, 2008

பிப்ரவரி மாதக்கவிதைகள் -1





உன்னுள் வாங்கும் ஒளியை
நானே வெளியிடுகிறேன்
நடுநிசியில் உன்னைத் தேட..


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இருவரிகள் உன்னக்காக
எழுத நின்னைக்கிறேன்
நீ எங்கு இருக்கிறாய்
என்று தெரியாமல்..




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அவளுடன் இனிய ஒரு நாள்
வாழ்ந்தால் போதும் என் உள்ளம்
அவளை மறவாமல்
தினமும் நினைக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்றும் உன் இன்முகம்
என் மீது திரும்ப
ஆவாலாக காத்து இருக்கிறேன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, February 3, 2008

பிப்ரவரி மாதக்கவிதைகள்



அந்த நாள்
அதிசயம் அவள்...


சப்தம் இல்லாமல்
சந்தங்கள் இல்லை
உன் புன்னகை இல்லாமல்
நீ இல்லை.



கவனங்கள் சிதறுகின்றன
நீ பார்க்காத பார்வையால்..
எனது பாடங்கள் படமாகின்றன
உன் திகட்டாத சிரிப்பால்...



உன்னை பார்த்ததில்
நான் பூவுலகில்
பார்க்க மறந்த நிகழ்வுகள் பல..



Saturday, February 2, 2008

நிழல்


பனிக்கால கனவுலகில்
நீ முழுநிலவாக..
நிகழ்கால உலகில்
நிழல்களாக..
நீ உலவுகிறாய்.
உன் மௌனங்கள்
என் மனதில் அம்புகளாக
தைத்த வண்ணம்
புரியாத வண்ணக்
கோலங்களாக நீ..
புதிர்களுக்கு பதில்
கிடைக்கின்றன
உன் புன்முறுவல்களுக்கு
பதில் இல்லை

நினைவுகள்



நீ புன்னகையுடன்
காட்சி தருகிறாய்
நான் நினைவுகள்
இழந்தவுடன்..


நினைவுகளில் நீ இல்லாமல்
நான் காணும்
எல்லா பொருளிலும்
நீ தான்.


உன் நினைவில் நான்
நிலாவில் நீ
உன்னை சுற்றிலும் வீண்மீன்கள்
என்னை சூழ்நத காலம்